Monday 31 March 2014

எம் பெயரை எங்கு எடுத்துச்சென்றாலும் பிரச்சினைதான்.

இப்ப TNEB க்கு புது இணைப்புக்காக போயிருந்தேன். விண்ணப்பத்தை நான் சுயமாக நிரப்ப முடியாது அங்கு இருக்கும் ஏஜெண்டு மூலமாகத்தான் போகனும்.

ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் என் பெயரை எழுதும்போது தவறு செய்யக்கூடாது என்று மேலும் ஒரு துண்டு சீட்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுது கொடுத்துவிட்டேன்.

இருந்து மீண்டும் மீண்டும் அந்த ஆள் பிழைகள் செய்ய ஒரு கட்டத்தில் பேனாவை கொடு நானே பெயரை மட்டும் எழுதி தந்துவிடுகிறேன் என்று கேட்டு வாங்கி எழுதினேன்.

“ தம்பி என்ன முஸ்லீமா ?” எரிச்சலுடன் கேட்டார் எந்த ஏஜெண்ட்.

“ இல்ல , எதுக்கு கேக்குறீங்க “

“ இல்ல துலுக்கனுங்கதான் ஒரு எழுத்து கூட மாறாம அப்படியே வரனும்னு சொல்லுவானுங்க” என்றார்.(பொதுவாகவே இஸ்லாமியர்கள் பெயர் எழுதுகையில் தமிழ்ப்பெயராக இல்லாமல் இருந்தால் பிழைகள் வர வாய்ப்புண்டு.)

அதற்கு மேல பொறுக்க மாட்டாம ”யார் எத எழுத சொன்னா உனக்கென்ன ? கேக்கற எழுதிக்கொடுக்குறதுக்குத்தான காசு வாங்குற அதுக்குத்தானே உனக்கு லைசன்ஸ் கொடுத்துருக்கு” ன்னு கேட்டேன்.

”தம்பி நீங்க ஏன் கோவப்படுறீங்க விடுங்க” ன்னு பக்கத்துல இருக்கவரு சமானத்தபடுத்த ஆரம்பித்துவிட்டார்.

நீ முஸ்லீமா ?

ஹே ஆர் யூ எ முஸ்லீம்?

கியா ஆப் முசல்மான் ஹோ?

இப்படி எத்தனதடவதான் கேப்பானுங்களோ தெரியல அப்படி கேக்குறது தப்பில்ல அந்த தொணி இருக்குல்ல அதுதான் கடுப்ப கிளப்புது. இப்படியே கேட்டு ஒரு நாள் என்னையும் முஸ்லீம் ஆக்கப்போறானுங்க.

# அது சரி என்ன நடக்கனும்னு எழுதிருக்கோ அது நடந்தே ஆகும் அது இஸ்லாத்தை தழுவுவதா இருந்தாலும்.

# எனக்கு தெரிந்தவரையில் மொராரி என்பது கிருஷ்ணரின் பெயர் அதோடு மரியாதைக்கு ஜி சேர்த்து மொரார்ஜி எனப்படுகிறது.

No comments: