Friday 8 March 2013

பிஸ்துரூபம்


எங்க அலுவலகத்தில் நான் மேலாளராய் சேர்ந்த நாள் முதற்கொண்டே என்னோடு ஒட்டிகொண்டவன் பிஸ்து.

நெற்றில் நெடுங்கோடும் ஆழ்வார் பாசுரங்களை அச்சு பிழராமல் பாராயணம் செய்யும் பழக்கமும் என்னிடம் இருந்ததுதான் காரணமென்று பின்னாளில் சொன்னான்
 ​.​

சேர்ந்ததுமே எனக்கு அறிமுகமானவன் பிஸ்து .அவன் பெயர் மணிகண்டன் தான் இருந்தாலும் நான் அவனை பிஸ்து என்றே அழைப்பேன்.

கல்லூரி வாழ்க்கையில் பிஸ்து என்று யாரையாவது அழைத்தால அவனுக்கு எல்லாமே தெரியும்னு அர்த்தம்.

நம்ம பிஸ்துக்கு தெரியாததே இல்லை எனலாம். கவிதை கட்டுரை இசை எல்லாத்துலயும் ஒரு ரவுண்டு வருவான்.குறிப்பா மொட்ட கடுதாசி போடுவதில் வல்லவன்
 ​.
இது 
​பற்றி 
 பேசினா
​ல்​
 எங்க தாத்தாவோட சாரீரம் அப்படியே எனக்கு வந்திருக்கிறதா அம்மா சொல்றான்னு சொல்லுவான்.நிறைய பத்திரிகைகளில் கதை கட்டுரை எழுதுவான்.

தனக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு அவனுக்கு அதை விட தன்னை யாரும் ஏமாற்றிவிட முடியாதென்ற எண்ணம் கூட.

உதாரணம் நாங்க இண்டர்வியூ எடுக்கும்போது திடீரென்று ஒரு ப்ரொஃபைலை ரிஜெட் செய்வான். ஏ
 ​ன்​
டான்னு கேட்டா
​ “​
அவன் மார்க்க பாத்தியா சுமார் ரகம் தான் ஆனா எங்க படிச்சிருக்கான் பாரு 
​CIT 
ல .அப்படின்னா என்ன அர்த்தம் ?
​”
​”​
என்ன அர்த்தம் 
​?” , நான்
 
​”​
எல்லாம் அந்த இழவு இட ஒதுக்கீடுதான்
​ . 
அவன் அந்த *** சாதியாதான் இருப்பான்
 ​” என்று
 சொல்லி சிரிப்பான்.

​”​
நோகாம நோம்பு கும்பிட வந்துடுவானுங்க.நல்ல வேளை தனியார்ல இல்ல இல்லன்னா நம்மளயேதூக்கி சாப்பிட்டிடுவானுங்க.
 ​”​ என்பான்.

​”​
அப்படியெல்லாம் பார்க்க கூடாதுடா
​”​
 என்று சொன்னால். 
​”​
நீ குலம் கெடுக்க வந்த கோடறி காம்பு
​”​
 என்று திட்டுவான்.அதவிட 
​”​
உனக்கும் உம் புள்ளைகளுக்காகவுதான் பேசுறேன்னு சொல்லுவான்
​”​
.

சின்ன வயசுலயே அப்பாவை இழந்துட்டான் நம்ம பிஸ்து.அவர் இருக்குற வரைக்கும் ஏதோ புரோகிதம் பண்ணி குடும்பத்த காப்பாத்திருக்கார். அவர் போனதுக்கு பிறகு மாமா வீட்டுலதான் ஒண்டிக்குடுத்தனம்.
இந்த கஷ்டத்துல வந்த பிஸ்துக்கு நல்லா ட்ரெஸ் பண்ணி பிள்ளைய தூக்கி வந்து ஸ்கூல்ல விட்டுட்டு போற அழுக்கு வேட்டி ஆட்களை பார்க்கும்போது ஏதோ ஒரு இனம்புரியாத வெறுப்பா இருந்தது.பின்னொரு நாளில் அவங்களுக்கு மட்டும் ஏதோ அரசாங்கத்துல இருந்து பணம் வருவது கண்டு எரிச்சலுக்கு உள்ளானான். 

வீட்டுக்கு சென்றதும் எனக்கும் அது மாதிரி அரசாங்கத்துல இருந்து பணம் வராதாம்மா என்று அம்மா கிட்ட கேட்டு வச்சான்?

அவங்க ஏழை பாழைங்கடா 
​அதனாலதான் ​
அவ
​ங்க​
ளுக்கு அரசாங்கம் சலுகை பண்ணுதுன்னு அம்மா சொன்னா?

அப்ப நாம மட்டும் ஏழை இல்லையா. நமக்கும் சலுகை கொடுத்தா நானும் அர்ஜூன் மாதிரி நல்ல ஸ்கூல்ல படிப்பேன்ல என்று கேட்டான்.

அர்ஜூன் பிஸ்துவின் மாமா பையன் ஊரில தரமான பள்ளியில் படித்து வந்தான்.இப்போ அவன் நாஸாவில் பணிபுரிகிறான்.

தன்னால் அப்படி ஆக முடியாத சுய கழிவிரக்கம் இடஒதுக்கீடு,ஸ்காலர்ஷிப் ஆகியற்றின் மேல் குறிப்பா அதை பெறுபர்கள் மேல் பெரும் வெறுப்பாக மாறியிருந்தது பிஸ்துக்கு.

இது பெரிதாய் மாறி ஒரு தீராத வெறுப்பாக உருவாகியிருந்தது அவனுக்குள்.

இப்படித்தான் இருவரும் ஒரு நாள் மாலை 
​அலுவலகத்தில் இருந்து ​
வீடு திரும்பும்போது டெலிபோன் லைன் போடும் குழி தோண்டும் வேலை செய்துகொண்டிருந்த குடும்பம் ஒண்றை கண்டோம்.

ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது அந்த குழந்தையின் அம்மா டீயும் பண்ணும் கொடுத்து கொண்டிருந்தாள். சேலையில் சேறும் சகதியுமாக சம்மட்டியை ஓரத்தில் சாய்த்து வைத்திருந்தால்.
குழந்தையின் தகப்பன் உடல முழுக்க மண்ணோடு உட்கார்ந்து புகையிலை போட்டு துப்பிக்கொண்டிருந்தான்.குழந்தைய ஆசுவாசப்படுத்த தேநீர் பருக சற்று அமர்ந்திருக்க கூடும்.

பிஸ்துக்கு வந்துச்சு பாருங்க கோவம் 
​”​
ஆறு மாசமா 100 அடியவே நோண்டிகிட்டு இருக்கானுங்க சண்டாளனுங்க
​​
. எப்படித்தான் இப்படி உக்காந்துகிட்டே சோறு திங்கிறானுங்களோ தெரியலை
 ​” ​
ன்னு கோவப்பட்டான்.
அன்று மாலைதான் அலுவலத்தில் தேநீர் அருந்தும்போது ரெண்டு மாசத்துக்கு ஃப்ரீஸ் பீரியட் என்பதால் ஒரு வேலையும் தன் ப்ரோஜெக்டில் கிடையாது எனவும் மனைவியோடு அவுட்டிங் போகலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னான்.

இப்படி இருந்தாலும் அலுவலக விஷயமா ஏதாவது பொது நிகழ்ச்சிகள் , தொண்டு நிறுவனங்களுக்கு செல்லுதல்னு ஏதேனும் ஆரம்பித்தால் பிஸ்து முன்னாடி நிப்பான்.இது மாதிரியான செயல்பாடுகளாலேயே பிஸ்துவின் உள் மன எண்ணோட்டம் யாராலும் கண்டுபிடிக்க முடியாவண்ணம் இருந்தது.

பிஸ்து பெரிய பெண்ணிய வாதி. அவன் கதை கட்டுரைகள் அனைத்திலும் பெண்ணை போற்றியும் அவர்கள் பிரச்சினை பற்றி பேசியும் இருக்கும்.

வீட்டுக்கு 
​என்னை ​
தொடர்ந்து அழைத்தபடியே இருப்பான். மத்த நண்பர்களிடம் சொன்னால் ஆச்சர்யப்படுகிறாகள் அவன் யாரையும் 
​இது வரை வீட்டுக்கு ​
அழைத்ததே இல்லையென்று.

ஏற்கனவே போய் வந்தது கிருஷ்ணம்மாச்சாரிதான். அவன் பிஸ்துவின் விரும்ந்தோம்பல் பற்றி சொல்லி இருப்பதால்தான் எனக்கு தயக்கம். குறிப்பாக காப்பி சரியில்லை என்று என்னால் பிஸ்து காப்பி டம்ளரை தன் மனைவி மீது வீ
 ​சு​
வதை நான் விரும்பவில்லை.

பிஸ்துவின் பெண்ணிய சிந்தனையிலும் ஒரு அரசியல் இருக்கும். சின்மயி விவகாரம் வந்தோபோது கொதித்தெழுந்து பதிவு பொட்டான்.ராஜனை அரெஸ்ட் செய்ததும் சாமீ கூலி கொடுத்துடுச்சின்னு சந்தோஷப்பட்டான்.

ஆனால் ஈழப்போரில் கருவறுக்கப்பட்டு கிடந்த கற்பினி+கரு சடலங்களை டிவியில் காண்பிக்கும்போது இவங்களுக்கு ஏன் தான் இவ்வளவு திமிறு ஏன் இப்படி போராடனும் அமைதியா அரசாங்கம் சொல்றபடி இருக்கலாம் இல்லன்னா வெளிநாட்டுக்கு போகலாம்ல என்பான்.

நான் அலுவலகத்தில் இருக்கும்போது திடீரென்று வீட்டிலிருந்த கால் பண்ணுவான்.என்ன வென்று விசாரித்தால்
 ​ 
எம்மாம் பெரிய ஊழல் இது . நாட்டையே குட்டி சுவராக்கிட்டானுங்கன்னு அலுத்துக்குவான்
 ​.​

என்னடா ஆச்சு என விசாரித்தால். 2ஜி கேஸ்ல இருந்து ராசாவுக்கு ஜாமீன் கொடுத்திருக்காங்களாம் என கடுப்போடு சொல்வான். 

பின்ன சிரிச்சுகொண்டே இவன் இங்க்லீஷ பாரேன்ன்னு சொல்லி ஊழலுக்கு மிகவும் முக்கியமான ராசாவின் ஆங்கில புலமை பற்றி பேசி கிண்டலடிப்பான். 

செய்தியில் தொடர்ச்சியாக வரும் ஜெயலலிதாவின் ஆங்கில பேட்டியை ஒப்பிட்டு அடடா என்ன அட்மினிஸ்ட்ரேஷன் என்ன ஸ்பீச் பாருன்னு சொல்லி பெருமிதம் கொள்வான்.

கடைசியா எல்லாம் இருக்குற இடத்துல இருக்கனும் பாத்தியால்லியா நாடே வெக்கி தல குனியுது அம்மாம் பெரிய ஊழல் என்று சொல்வான்.

இந்நிலையில், பிஸ்து கொல்கத்தா வரை அலுவலவ விஷயமாய் போயிருந்தான்.

திடீரெ
 ​ன்று​
 இரவு 10 மணி இருக்கும் கால்  செய்து தன் மனைவிக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாவும் விஜயா ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் நாளை காலையில் 
​எப்படியாவது ​
சென்னை 
​​
வந்துவிடுவதாகவும் சொன்னான் .உடனே போய் பார்த்து உதவ முடியுமாவென்று கேட்டான்.

​உடனே அலுவலகத்திலிருந்து கிளம்பி போய் ​
 பார்த்தேன். 
​இடது விலா பகுதியில் நன்கு​ அடிபட்டிருப்பதாகவும் 
கண்டிப்பாக சர்ஜரி செய்யவேண்டும் என்றும் O-ve ரத்தம் தேவை என்றும் டாக்டர் சொன்னார்.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சட்டென்று மனசுக்குள் வந்தவன் கலியதாஸ்தான்.நல்ல திறமை சாலி மிகுந்த கஷ்டத்துக்கு இடையில் மேலே வந்தவன்.

இடஒதுக்கீட்டில் படிச்சவன் தான் NEC இல் கோல்டு மெடல் வாங்கியவன். இவன் நேர்காணலின் போது பிஸ்து விடுமுறையில் இருந்ததால் தப்பித்து உள்ளே வந்தான். அவன் நல்ல நேரம் என்னுடைய அணியில் சேர்ந்துவிட்டான்
 ​ நானே விரும்பி எடுத்துக்கொண்டேன்.​

மிகுந்த சமூக அக்கறை உள்ளவன்.ஆறு மாசத்துக்கு ஒரு முறை ரத்தவங்கிக்கு போய் ரத்தம்தானம் செய்வான்.
​சமூக 
பிரச்சினைகளில் போராட்டங்களில் பங்கெடுப்பவன்.

பிஸ்துக்கு கலியதாஸை சுத்தமாக பிடிக்காது அவனது திறமை மீது குற்றம் சொல்வதாகவே இருப்பான். ஆனாலும் என்னை தாண்டி ஏதும் செய்ய முடியாது என்பதால் வெறும் பேச்சோடு நிறுத்திக்கொண்டான்.

கால் பண்ணி தம்பி எங்கடா இருக்கேன்னு கேட்டேன்.இதுக்கு கூட பிஸ்து இருந்தா கோவப்பட்டிருப்பான். 
​”
 ​
அதென்ன அந்த ****** தம்பின்னு உறவு கொண்டாடுற அவன் யாரு நாம யாரு பட்டும் படாம இரு.இடத்த கொடுத்த மடத்த பிடிச்சுருவானுங்க அவனுங்க
 ​” என்பான்.
எனக்கு அலுவலகத்துக்குள்தான் மானேஜர் சப் ஆர்டினேட்ஸ் வெளியில் சகோதர்கள் போலவே.
அதனால் விஷயத்தை சொன்னதும் உடனே அடித்து பிடித்து மடிப்பாக்கத்தில் இருந்து வடபழனி வந்து ரத்தம் கொடுத்தான். தேவையான அறுவை சிகிச்சை முடிந்தது.இடையில் என் மகளுக்கு மூச்சு திணறுகிறதென்று வீட்டிலிருந்து மனைவி அழைத்தலால் என்ன செய்வதென்று தெரியமல் நின்றேன்.
கலியதாஸ்தான் நீங்க கிளம்புங்க
​ அண்ணா ​
 நான் பார்த்துக்குறேன்னு சொல்லி அனுப்பினான். கொஞ்சம் பணத்தை எடுத்து அவன் கைல திணித்துவிட்டு மணி 02:30 இருக்கும் வீடு கிளம்பினேன்.

அண்ணா நான் பார்த்துகொள்கிறேன் கிளம்புங்கள் என்றான். நாளைக்கு நீ லீவ் எடுத்துக்கோ நான் பார்த்து
 ​க்கொள்கிறேன்.​
 நான் காலைலயே ஹாஸ்பிடல் வந்துடுறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன்.

காலையில் மருத்துவமனை சென்ற போது பிஸ்து ஏற்கனவே வந்திருந்தான். கலியதாஸும் கிளம்பாமல் தூக்கம் இழந்து காணப்பட்டான்.

சென்றதும் என் கை கண்டசதையை பற்றி ஒரு ஓரமாய் இழுத்துபோனான் பிஸ்து.

”உன்னைத்தானே இருந்து பாத்துக்க சொன்னேன் அவனை ஏன் வர சொன்ன என்று கடிந்துக்கொண்டான்.”
இல்லை ரத்தம் கொடுக்க....என்று நான் இழுத்த போது

கடும் கோபமடைந்த பிஸ்து ஏன் நீ கொடுக்க வேண்டியதுதானே போயும் போயும் அந்த *****
 ​(சாதியையும் பிறப்புறுப்பையும் ஒரே சேர சொல்லி)​
 ஆ என இழுத்தான்....

நான் சட்டென சுதாரித்து ”  இல்லை ரத்த வங்கிக்கும் செல்ல வேண்டியிருந்தது அதான் அவனை அழைத்தேன்” என சொல்லி மாற்றிவிட்டேன்.

ரத்தம் கொடுப்பதில் குறிப்பிட்ட ரத்த பிரிவுக்கு ஒத்த ரத்த பிரிவுதான் ஏற்கும் என்ற சிந்தனை கூட மறந்துவிட்டான் போலும் ஒரு கணம்.

ஒரு வேளை கலியதாஸ் ரத்தம் பிஸ்துவின் மனைவி உடலில் ஓடுகிறதென்று சொல்லியிருந்தால் அவளை விவாகரத்து கூட செய்திருப்பான் பிஸ்து.

மனசு கேட்கவில்லை
 ​ எனக்கு​
 கண்ணால் சைகை காண்பித்து கலியதாஸை அழைத்து கிளம்புடா என்றேன். அவனுக்கு ஏதும் புரியவில்லை 
​” ​
ஏன்ண்ணா
​ ?​
 . இன்னைக்குதான் லீவ் எடுத்துக்க சொல்லிட்டீங்களே
 ​ பிறகென்ன ?​”

​”​
கொஞ்சம் நேரம் இருந்து உங்களுக்கு உதவி ஏதும் வேணும்னா செஞ்சிட்டு போறேன்
​”​
னு சொன்னான்.

​”​
பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் கிளம்பு
​”​
 என சொல்லிவிட்டேன்.

அரை மனதோடு கலியதாஸ் கிளம்பி போனான்..

​எனக்கு வந்த கோவத்துக்கு இந்நேரம் ​
நானும் கிளம்பியிருக்கனும்
​ .​
 பிஸ்து என்னொடு இவ்வளவு நெருக்கம் பாராட்டுவதற்கு காரணம் நான் அவன் சாதி என்றாலும் நான் அவனோடு நட்பு பாராட்டுவதற்கு நட்பும் அடிப்படை 
மனிதநேயமும்தான் என்று எப்படி சொல்லி விளக்க
 ​.​

எண்ணியபடி மருத்துவமனை வெயிட்டின் பெஞ்ச்சில் 
​தலையை ​
குணிந்த படி இருக்கேன்.